நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் ஏப்ரல் மாதம் அதனை சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.
ஆகவே, மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்கள் ஊடாக மக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆயினும், மின்வெட்டுக்கள் ஏதும் இடம்பெறாது என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.