deepamnews
இலங்கை

தென்கொரிய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங் வூன்ஜின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பில், தென்கொரிய தூதுவரின் சேவைக் காலம் முடிவடைவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதிக்கும் தென்கொரிய தூதுவருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஜொங் வுன்ஜிங் தனது சேவைக் காலத்தில் இந்த நாட்டிற்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதியின் நன்றிகள் கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜொங் வூங்ஜிங் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் 02 ஜூலை 2020 அன்று இலங்கை வந்தடைந்தார்.

Related posts

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

videodeepam

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

videodeepam

தலைமுடியால் பட்டா ரக வாகனத்தை இழுத்து சாதனை!

videodeepam