deepamnews
இலங்கை

விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு வந்த போது கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக வீதியை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இதுவாகும்.

குருந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றயதினம் (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கு ஜூன் 19-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related posts

இன்று முதல் மேலும் பல பொருட்களின் விலையை குறைத்தது சதொச நிறுவனம்

videodeepam

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாவிட்டால் போராட்டங்கள் தொடரும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

videodeepam

கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மீட்பு!

videodeepam