deepamnews
சர்வதேசம்

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார் –  மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தாம் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை சுற்றிவளைக்கும் போர் ஒத்திகையில் ஈடுபட்ட சீன இராணுவம் போர் செய்வதற்கு தயார் என தெரிவித்துள்ளது.

படையினர் எந்நேரிடமும் போரிட தயாராக உள்ளனர் மேலும் எந்தவகையான தாய்வானின் சுதந்திர முயற்சியையும் வெளிநாட்டு தலையீடுகளையும் முறியடிப்பதற்காக எவ்வேளையிலும் அவர்களால் போரிட முடியும் என சீன இராணுவம் தெரிவித்துள்ளது.

கூட்டு வாள் என்ற பெயரில் சீன இராணுவம் இந்த ஒத்திகையை முன்னெடுத்திருந்தது. தாய்வானிற்கான எச்சரிக்கை என இந்த ஒத்திகையை முன்னதாக சீன இராணுவம் வர்ணித்திருந்தது.

Related posts

பிரேசிலின் சில தசாப்த கால ஆட்சி மாறுகின்றது – இடதுசாரி அணிக்கு வெற்றி

videodeepam

பாகிஸ்தான் பெறும் கடன் அனைத்தும் ராணுவ உயரதிகாரிகள் கைகளுக்கே போய் சேருகிறது: நிராகரித்தது சர்வதேச நாணய நிதியம்.

videodeepam

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம் 

videodeepam