deepamnews
இலங்கை

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தாபன கோவை விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நேற்று இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தாபன கோவை பிரிவு 6 மற்றும் 7, அத்தியாயம் 57I, தொகுதி Il இன் விதிகளைப் பின்பற்றாமல், அரச அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஒரு குற்றமாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்ற அரச துறை அதிகாரிகள், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சங்கானைப் பகுதியில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

videodeepam

இதொகாவுக்கு விடுத்த அழைப்பு தற்பொழுது  சாத்தியப்பட்டுள்ளது – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

videodeepam