deepamnews
இலங்கை

சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடும் அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

தாபன கோவை விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நேற்று இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தாபன கோவை பிரிவு 6 மற்றும் 7, அத்தியாயம் 57I, தொகுதி Il இன் விதிகளைப் பின்பற்றாமல், அரச அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஒரு குற்றமாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்ற அரச துறை அதிகாரிகள், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்தை கையாள்வது தனக்கு கடினமானது – பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவிப்பு

videodeepam

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

videodeepam

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

videodeepam