deepamnews
இந்தியா

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைக்கமைய, சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் இதனை தொடர்ந்து சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Related posts

35 வருடங்கள் சிறை தண்டனை – இலங்கையரின் விடுதலை விவகாரத்தை பரிசீலிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார் – வீட்டில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு

videodeepam

ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் –  இந்திய உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

videodeepam