deepamnews
இந்தியா

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைக்கமைய, சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் இதனை தொடர்ந்து சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணையம் பரிந்துரைத்த வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

Related posts

இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் தொடரும் வன்முறை – 5 பேர் உயிரிழப்பு.

videodeepam

அரசின் அனைத்துத் துறைகளையும்  ஆர்.எஸ்.எஸ். தான் நடத்துகிறது!  – ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

videodeepam

மாண்டஸ் புயல் தாக்கத்தால் தமிழகத்தில் 5 பேர் உயிரிழப்பு –  163 குடிசைகள், 69 படகுகள் சேதம்

videodeepam