deepamnews
இலங்கை

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

பாடசாலைகளில் தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்ளாமல் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் உள்வாங்கப்பட்ட நிலையில், பணிகளுக்கு அமர்த்தப்படாத மேலதிக ஊழியர்களை இவ்வாறு ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்கும் நோக்கில் பொது போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பொது அறிவு மற்றும் உளநல பரீட்சைகளின் புள்ளிகள் அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Related posts

தமிழ் இளைஞர்கள் இருவர் படுகொலை.

videodeepam

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியில் பாடசாலை மாணவர்கள்.

videodeepam