deepamnews
இலங்கை

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த நிலையில், விசேட உரையொன்றை வழங்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரை வழங்கிய அவர், “அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும். கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இறக்குமதி செய்யப்படும் பழங்களில் ஈயம் – பொதுமக்களுக்கு பாதிப்பு

videodeepam

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam

கடந்த 24 மணித்தியாலங்களில் 185 பேர் விபத்துகளில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி

videodeepam