deepamnews
இலங்கை

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் விசேட அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்த நிலையில், விசேட உரையொன்றை வழங்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் உரை வழங்கிய அவர், “அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை ஊடாகவே தீர்வு காண முடியும்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படும். கடந்த காலங்களில் சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்காலத்திலும் விசாரணைகளின் ஊடாக நிரபராதிகளாக அடையாளம் காணப்படுவோரை விடுதலை செய்ய எதிர்பார்ப்பதாக” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஆளுநர்களை சந்தித்த பிரதமர் தினேஷ் குணவர்தன – உள்ளூர் ஆட்சி மன்றங்கள் தொடர்பில் ஆராய்வு

videodeepam

நாட்டில் இனப்பிரச்சினை இல்லை – தமிழ் அரசியல்வாதிகள் மீது  சரத் வீரசேகர குற்றச்சாட்டு  

videodeepam

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள அனுமதி

videodeepam