deepamnews
இலங்கை

போதைப்பொருளுடன் மூவர் கைது

வவுனியா, உளுக்குளம் பொலிஸார்  விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வவுனியா பாவற்குளம் பகுதியில் உள்ள பன்சாலை வீதி ஊடாக சென்ற 3 இளைஞர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த 3 இளைஞர்களும் உளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 – 25 வயதிற்குட்பட்ட வவுனியா சூடுவெந்தபுலவு மற்றும் பாவற்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார்  தெரிவித்தனர்

Related posts

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

videodeepam

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

videodeepam

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட நால்வரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை – சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

videodeepam