deepamnews
சர்வதேசம்

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைனுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயார் என கூறியதையடுத்தே, அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

உக்ரைனில் இருந்து  ரஷ்ய படைகளை வௌியேற்றுவதே இரு நாடுகளுக்கும் இடையிலான  யுத்தத்தை நிறைவு செய்வதற்கான ஒரே வழி என ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

எனினும், ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு மாத்திரமே தயார் எனவும் ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறாது எனவும் அந்நாட்டு இராணுவப்பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா- கடும் கோபத்தில் புடின்

videodeepam

பிரதமராக பதவியேற்ற சில மணி நேரத்தில் ரிஷி சுனக் எடுத்த அதிரடி நடவடிக்கை!

videodeepam

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிப்பு

videodeepam