deepamnews
இலங்கை

நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!

நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணதொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணத்தை நிறுவனமொன்றில் முதலீடு செய்தமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது .

இதன்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்த நிலையிலேயே வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

வடக்கில் சீனா உதவி திட்டத்தில் கடற்தொழிலாளர்களுக்கு வீடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

videodeepam

சண்டிலிப்பாயில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!

videodeepam

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

videodeepam