deepamnews
இலங்கை

வெடுக்குநாறி மலையில் சிலை வைக்க மீண்டும் தடை

வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் நிகழ்விற்கு பொலிசார் மற்றும் தொல்பொருட்திணைக்களத்தினர் தொடர்ந்தும் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்வதற்கு வவுனியா நீதிமன்றம்  உத்தரவு வழங்கியிருந்தது. இதனையடுத்து நேற்று ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறித்த செயற்பாட்டினை கண்காணிக்கும் நோக்குடன் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்,  மற்றும் பொலிசார் ஆலய வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கு தடையை ஏற்படுத்தும் நோக்குடன், புதிய விக்கிரகங்களை வைக்க வேண்டாம் என்றும் ஏற்கனவே இருந்த விக்கிரகங்களையே மீள வைக்குமாறு பொலிசார் மற்றும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட ஆலயத்தரப்பினர், முன்னர் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்கள், களவாடப்பட்டுள்ளது. உடைந்த சிலைகளை மீண்டும் எப்படி வைக்க முடியும், எமது சமய வளக்கத்தின் படி அது முறையான செயற்பாடு இல்லை என்று தெரிவித்தனர்.

இதனால் அதிகாரிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் சற்றுநேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது. எனினும் சற்றுநேரத்தில் திட்டமிட்டபடி அனைத்து விக்கிரகங்களும் வைக்கப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம்  ஆலய வளாகத்திற்கு வருகைதந்த பொலிசார் மற்றும் தொல்பொருட் திணைக்கள உத்தியோகத்தர் ஆகியோர் தமது பாதணிகளை களற்றாது ஆலய சூழலிற்குள் நின்றனர்.

இதனால் விசனமடைந்த பொதுமக்கள் உயர் பொறுப்புக்களில் உள்ள அரச அதிகாரிகள் சமய விடயங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்தமைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.  

Related posts

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மரணம் வரை செல்லும் அபாயம்!

videodeepam

இணைத் தலைமைக்கு இணங்கவில்லை –ஜனாதிபதி ரணிலின் அறிவிப்புக்கு ஜப்பான் மறுப்பு

videodeepam

சண்டிலிப்பாயில் வீடொன்றின மீது தாக்குதல் ; ஒருவர் காயம் ; உடைமைகள் நாசம்

videodeepam