deepamnews
இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் இந்திய விமானப்படை தளபதி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தீர்மானம்

இந்திய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி 4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன் மானிய உதவியின் கீழ், திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை கல்வியகத்தின் இந்தியா – இலங்கை நட்புறவு அரங்கிற்கான அடிக்கல்லை இந்திய விமான படையின் தளபதி எயார் சீஃப் மார்ஷல் சௌதரி நாட்டவுள்ளார்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கைகயின் அடிப்படையில் இந்த விடயம், செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Related posts

நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

videodeepam

புது டில்லி பயணமாகும் ரணில்!

videodeepam

குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையை அகற்றிய கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் – கதறும் தந்தை!

videodeepam