deepamnews
இலங்கை

நீர்கொழும்பு – துன்கல்பிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு

நீர்கொழும்பு – துன்கல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

பிட்டிபனவை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அடையாளந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள், துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவரும் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்பதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

கோட்டாபய ராஜபக்ஷவால் இலகு ரயில் திட்டம் நிறுத்தப்பட்டதால் 5,978 மில்லியன் ரூபா நட்டம்

videodeepam

எரிபொருள் கையிருப்பை பேணாத நிரப்பு நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

videodeepam

மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்.

videodeepam