deepamnews
இலங்கை

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் இரதோற்சவ திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 09.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் சமேதராக உள்வீதி ஊடாக வலம்வந்து, வெளிவீதியில் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 29.08.2023 அன்று நடைபெற்று, மாலைகொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்து பக்தர்கள் கலந்துகொண்டன

Related posts

300 இற்கும் அதிகமான இலங்கையர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

videodeepam

13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

videodeepam

தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

videodeepam