கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கோனாவில் ஊற்றுப் புலம் பகுதியில் 26.09.2023 அன்று நள்ளிரவு 12.00 மணியலவில் உற்றுப்புலம் சந்தியில் அடி காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் இனம் காணப்பட்டுள்ளது.
இவர் 30 வயதுடைய கிளிநொச்சி கோணாவில் பகுதியைச்சேர்ந்த புஸ்பராசா டினேஸ் என்பவராவார். ஒரு வயதும் ஒன்பது மாதமுடைய பிள்ளையின் தந்தையென ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் கிளிநொச்சி மாவட்ட நீதவான் பார்வையின் பின்னர் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கிளிநொச்ச்சி போலீசார் தெரிவித்துள்ளார்