deepamnews
இலங்கை

மாவட்ட செயலகத்தில் தோன்றிய “காதலி” வாழை!

மாவட்ட செயலகத்தில் தோன்றிய “காதலி” வாழை!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் “கதலி” வாழைக்கு பதிலாக “காதலி,” வாழை திரையில் தோன்றியது.

தவறுகள் விடுவது மனித இயல்பு ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினர் தாங்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை உயர் கலந்துரையாடல் ஒன்றுக்கு சமர்ப்பிக்கும் போது திரும்ப மேற்பார்வை செய்யவில்லை என்பதே அர்த்தம். 

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல் கடந்த இரு மாதங்களாக கூட்டத்துக்கு திகதி இடப்பட்டும் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் கொழும்பு சந்திப்புக்களின் நிமித்தம் பிற் போடப்பட்டது.

அவ்வாறான நிலையிலும் கூட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விடயதானங்கள் கூட்டத் திகதிகள் பிற்போடப்பட்டும் எழுத்துப் பிழைகள் அவதானிக்கப்படவில்லை.

Related posts

உள்ளூராட்சி தேர்தல் இரத்துச் செய்யப்படவில்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam

மோட்டார் குண்டுகள் அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்க நடவடிக்கை..

videodeepam

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்

videodeepam