வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயர் தேவஸ்தானத்தின் வருடாந்த 10ஆவது திருவிழாகிய இருதோரோற்சவம் நேற்று (28.09) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வசந்த மண்டப பூசைகளுடன் ஆரம்பமாகி விநாயகர், முருகன்,வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள், உள்வீதி யுடாக வலம்வந்து வெளிவீதி வந்து தேரேரி அருள் பாலித்தார்
ஆலய பிரதம குரு கணநாதர்குருக்கள் தலைமையில் இந்த திருவிழா நடைபெற்றது. இவ் திருவிழாவில் வட பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த அடியார்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக்கொண்டனர்.