deepamnews
இலங்கை

கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு – வவுனியாவில் பரபரப்பு.

வவுனியா, தரணிக்குளம் – குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து நேற்று மாலை பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் – குறிசுட்ட குளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அயலவர்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டதுடன் அதனை மீட்டனர்.

அந்தச் சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு கைகளும், ஒரு காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் எனக் கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின்வெட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அவமதிப்பு வழக்கு

videodeepam

தேர்தலுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

யாழ் நோக்கி சென்ற அரச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து.

videodeepam