deepamnews
இலங்கை

உயர்தர மாணவி குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு!

பலாங்கொடை, பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பலாங்கொடை பொலிஸாரால் மேற்படி மாணவியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ்ப் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேகமாக பரவும் இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் – பொதுமக்களிடம் கோரிக்கை

videodeepam

தமிழர்பிரச்சினைக்கு உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தீர்வு

videodeepam

அரசாங்கம் நாடுகளுக்கு காணி வழங்குவதில்லை முதலீட்டாளர்களுக்கே காணி – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

videodeepam