deepamnews
இலங்கை

தனிநபர் ஒருவர் யாழ் மாநகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்

தனிநபர் ஒருவர்  யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக இன்று (19) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த நபருடன் யாழ்மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும்  குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

Related posts

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வெளியான சுற்றறிக்கை

videodeepam

– ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகை தொடர்பில் கலந்துரையாட தீர்மானம்: அரசாங்கம் புதிய நகர்வு

videodeepam

 தெல்லிப்ழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம்.

videodeepam