தீப்பிடித்து மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி இலங்கை அரசு தாக்கல் செய்த வழக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (09) முதல் விசாரணைக்கு வருகிறது.
இலங்கை அரசு சார்பில் சிங்கப்பூர் சட்ட நிறுவனம் ஒன்று ஆஜராக உள்ளது.
மே 20, 2021 அன்று தீப்பிடித்த இந்த கப்பல் விபத்து, சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய கடல்சார் சுற்றுச்சூழல் விபத்தாகக் கருதப்பட்டது, ஆனால் அதன் மீது வழக்குத் தொடருவதில் தாமதம் விமர்சிக்கப்பட்டது.
இந்த வழக்கு அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிபுணர் ஆய்வு அறிக்கையின்படி, மொத்த சேதம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இழப்பீட்டுத் தொகையைப் பெற சிங்கப்பூரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.