deepamnews
இலங்கை

அதிகாரத்தைக் கைப்பற்ற இன குரோதத்தை தூண்டியது மொட்டு – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனக்குழுக்களுக்கு இடையே குரோதத்தை தூண்டி விட்டது என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த கால சந்தர்ப்பவாத மற்றும் இனவாத அரசியல்வாதிகள் தான் நாட்டை அதலபாதாளத்திற்கு இட்டுச் சென்றனர்.

இனவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.

நாட்டின் அனைத்து பிரஜைகளும் இலங்கையர்கள்.

நானோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியோ ஒருபோதும் மக்களை அவர்களின் இனத்தின் அடிப்படையில் பிரிக்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ இல்லை.

நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று இல்லை, பல்வேறு இனக்குழுக்கள் தான் உள்ளன.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று வெளியாகும் ஆதாரங்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை அறிவிப்பு

videodeepam

கடும் மழை காரணமாக முல்லைத்தீவு மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு

videodeepam