deepamnews
இலங்கை

அமெரிக்க புறப்பட்டது அரசாங்க குழு- சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தும்

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசாங்கக் குழுவொன்று நேற்று வொஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுவில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.

வரி சீர்திருத்தங்கள் தொடர்பாக இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அரசாங்க பிரதிநிதிகள் குழு சர்வதேச நாணய நிதியத்துக்கு விளக்கமளிக்கும்.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

தாங்கள் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர்,தங்களின் கொள்கைகளுடன்  இலங்கை இணங்குவதற்காக காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில். பொதுமக்கள் மத்தியில் இடையூறு – வன்முறையுடன் செயற்பட்டால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

videodeepam

போலி நாணயத்தாள் அச்சடிக்கும் இயந்திரத்துடன் ஒருவர் கைது

videodeepam

சேலம் அருகே கூலமேட்டில் ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த 600 காளைகளை அடக்கிய 300 வீரர்கள்

videodeepam