deepamnews
இலங்கை

13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழப்பு – பொலிஸார் அறிவிப்பு

தென் மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுள்ளன.

இதன்போது 7 பேர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை – திக்வெல்ல தெமட்டபிட்டி குமாரதுங்க மாவத்தையில், நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வீதியில் காத்துக்கொண்டிருந்த 52 வயதான தந்தை ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்தில் இருந்த 15 வயதான சிறுமிக்கு, எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த குறித்த சிறுமியின் தந்தை, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு – வருடாந்த மாநாட்டில் தீர்மானம்

videodeepam

சர்வதேச நாணய நிதிய விவாதம் இன்று ஆரம்பம்

videodeepam

காரைநகரில் கடற்படை வேட்டை – 137 கிலோ கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்கள் கைது!

videodeepam