deepamnews
இலங்கை

சூட்சுமமான முறையில் வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உற்பட்ட விசுவமடு கொழுந்துபுலவுபகுதியில் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தனியாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அங்கு கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றய தினம் பொலீசார் திடீர் சுற்றிவளைப்பை மேற் கொண்டனர் .

இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாரால் 23.12.2023 கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா அளிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்படுள்ளது .

மேலும் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும்போலீசார் மீட்கப்பட்டுள்ளது. 24.12.2023 நாளை சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமண்றுக்கு முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்

Related posts

கால்நடைகள் உயிரிழப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள்

videodeepam

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கமில்லையா – எம்.ஏ. சுமந்திரன் கேள்வி

videodeepam

சிறுவர்களின் திறன் விருத்திக்கு சிறுவர் சந்தை உதவுகிறது – இராமநாதன் கல்லூரி முன்னாள் அதிபர் தெரிவிப்பு!

videodeepam