deepamnews
சர்வதேசம்

புளோரிடாவை சூறையாடிய ஐயான் சூறாவளி

ஐயான் சூறாவளி புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புயல் நேற்றுமுன்தினம் கரையை கடந்த போது மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உள்ளது.

இதனால் பாரியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சுமார் 2.6 மில்லியன் மக்கள் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.

இது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், புளோரிடாவே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

பேரழிவு மாநிலமாக அது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழு மற்றும் 300 நோயாளர் காவு அமெரிக்க அரசு அனுப்பியுள்ளது.

மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது.

புளோரிடா மக்களுக்கு  துணையாக அமெரிக்க அரசு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 மில்லியன்  மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவதிப்படுகின்றனர்.

Related posts

சீனாவில் காய்ச்சல் தொற்று அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கை அமுல்படுத்த திட்டம்

videodeepam

சூடானில் இடம்பெறும் மோதல்களால்  413 பேர் பலி, 3,551 பேர் காயம் –  உலக சுகாதார ஸ்தாபனம் அறிவிப்பு  

videodeepam

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிப்பு

videodeepam