deepamnews
இலங்கை

திடீரென ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடினார் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் தொலைபேசி மூலம், தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியிருந்தார்.

இதையடுத்தே, நேற்றுமாலை மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

videodeepam

புதிய சட்டத்தை தயாரித்து தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம்  திட்டமிடுகிறது – டிலான் பெரேரா

videodeepam

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

videodeepam