deepamnews
இலங்கை

போராட்டங்களை அடக்க இந்திய படையினரையே பயன்படுத்த வேண்டும் என்கிறார் இரா சாணக்கியன்

இலங்கையில் படையினரை பயன்படுத்தி போராட்டங்களை அடக்கப்போவதாக ரணில் விக்ரமசிங்க கூறினால், இந்திய படையினரை பயன்படுத்தியே அதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்நேற்று உரையாற்றிய அவர், நாட்டில் பொருளாதார பிரச்சினையினால், பொதுமக்கள் மாத்திரமன்றி படையினரும், படையினரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க, படையினரை பயன்படுத்தி போராட்டங்களை நசுக்க முடியாது. அவர்கள் அதற்கு உடன்படமாட்டார்கள். சில வேளைகளில் அவர்களே போராட்டங்களை ஆரம்பிக்கக்கூடும்.

எனவே ரணில் விக்ரமசிங்க, இந்திய படையினரை பயன்படுத்தியே போராட்டங்களை அடக்க முடியும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

Related posts

6 பேருக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – கடிதம் அனுப்பினார் மைத்திரி

videodeepam

கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்களுக்கு பொலிஸார் பாராட்டு!

videodeepam

கைதிகளில் 60 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள்.

videodeepam