deepamnews
இலங்கை

தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தாம் தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று  உரையாற்றிய அவர், தேர்தலை ஒத்திவைக்க தமக்கு அதிகாரம் இல்லையென்று குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய தேவை பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் விடயங்களுக்குள் அராஜகம் மற்றும் வன்முறை என்பன உள்ளடங்குவதில்லை.

எனவே அவற்றுக்கு இடம் தரமுடியாது எனவும் ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரித்துள்ளமை குறித்து கருத்துரைத்த அவர், படையினருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் புதிய உத்திகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related posts

நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்: மகிழ்ச்சித் தகவல் வெளியானது

videodeepam

இலங்கையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகப்பு – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

videodeepam

குறித்த நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவிப்பு

videodeepam