நிதி நிதியத்தின் ஆதரவுடன் 4 வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் முன்னோக்கி செல்வது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தின் 135 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (29) கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் பழைய முறைகளை பின்பற்றுவதா அல்லது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் முன்னோக்கி செல்வதா என்பதை தாம் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி அங்கு தெரிவித்தார்.