deepamnews
இலங்கை

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அடுத்த வருடத்துக்கான வரவு –  செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. கூட்ட வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூட்டியுள்ள நிலையில் தற்போது இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் முக்கியமானது  என எதையும் குறிப்பிட முடியாது என எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடியை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான ஜனாதிபதியின் திட்டமாக மட்டுமே இது அமைந்துள்ளது. அதனால் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் எனவும்  தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

முரண்பாடுகளை உருவாக்கும் தொல்லியல் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்.

videodeepam

வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

videodeepam