deepamnews
இலங்கை

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அடுத்த வருடத்துக்கான வரவு –  செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. கூட்ட வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூட்டியுள்ள நிலையில் தற்போது இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் முக்கியமானது  என எதையும் குறிப்பிட முடியாது என எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடியை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான ஜனாதிபதியின் திட்டமாக மட்டுமே இது அமைந்துள்ளது. அதனால் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் எனவும்  தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு, கிழக்கில் ஹர்த்தால் – 7 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு.

videodeepam

நீதித்துறைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு

videodeepam

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது – முரளிதரன்

videodeepam