deepamnews
இலங்கை

டிசம்பர் 15 வரை மின்வெட்டு தொடரும் – சுற்றுலா வலயங்களில் இரவு வேளையில் மின்வெட்டு இல்லை

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களில் டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து இரவு வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அவர் கூறினார்.

டிசம்பர் 15 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மின்வெட்டுக்கான அனுமதி நேற்று வரை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.

அதற்கு பின்னரான காலத்தில் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மின்சார சபையின் நட்டத்தை மீள சரிசெய்ய மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டுமென மின்சார சபை பிரதிநிதிகள் தேசிய சபை உப குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

Related posts

அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை

videodeepam

கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாவினை வழங்க மறுத்த பெண் – முதியவர் உயிர்மாய்ப்பு.

videodeepam

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3ஆம் கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை இன்று

videodeepam