deepamnews
இலங்கை

யாழ் விமான சேவை மீண்டும் ஆரம்பம் .

யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் தொற்றுக் காரணமாக மூடப்பட்டு இன்றுவரை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

இவ்வாறு மூடிய நிலையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம் மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி திறக்கப்பட்டு சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

இவ்வாறு இடம்பெறவுள்ளதாக கூறப்படும் விமான சேவைக்கான விமான சிட்டைகள் இன்று முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் மத்திய வங்கியின் முடிவினால் மேலும் நெருக்கடியில் இலங்கை

videodeepam

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினம் எதிர்வரும் வாரத்தில் அறிவிப்பு

videodeepam

யாழ். அச்சுவேலி பகுதியில் முகமூடி கொள்ளையர்களினால் 15,000 ரூபா பணம் வழிப்பறி

videodeepam