deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு தீர்மானத்தை நீக்கவும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை  

மின் கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் தீர்மானத்தை நீக்கிக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளையின் கீழ் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மின்சார கட்டணத்தை இரண்டு தடவைகள் அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையினால் அறிவிக்கப்படடுள்ளது. இது பாடசாலை மாணவர்களின் பரீட்சைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது பற்றி தமக்கு தெரியாது என்றும் கூறியுள்ளது.

உண்மைகள் ஆட்சியாளர்கள் அறியாவிட்டாலும் மக்கள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றனர். இவ்வாறான நேரத்தில் மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை நீக்கிக்கொண்டு, கட்டண அதிகரிப்பை செய்ய மாட்டோம் என்று அறிவியுங்கள் என்றார்.

Related posts

முதல் தவணை நிதி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்? சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

videodeepam

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது என்கிறது அரசாங்கம்

videodeepam

இந்தியாவின் இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தியது சர்வதேச நாணய நிதியம்

videodeepam