deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என இன்னும் தீர்மானமில்லை – ஆர்.சம்பந்தன் தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில்  தமிழ் கட்சிகளுடன்  இணைந்து போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என உறுதியளித்த அவர் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என  குறிப்பிட்டார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவது பற்றி பங்காளி கட்சிகள் தங்களின்  கருத்துகளைக் தெரிவித்துவரும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை கூறியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் ஐ.பி.எல் போட்டிக்கு தெரிவானார்

videodeepam

எரிபொருள் பவுசர், முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலி

videodeepam

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

videodeepam