deepamnews
இலங்கை

புகையிரத அட்டவணையில் புதிய மாற்றம்

பெப்ரவரி மாதம் முதல் புதிய புகையிரத அட்டவணை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சர் தலைமையில் கூடிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய புகையிரத கால அட்டவணையானது கிடைக்கக்கூடிய திறனுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், “எல்லா-ஒடிஸி” போன்ற சுற்றுலா அம்சங்களுடன் கூடிய தொலைதூர புகையிரத சேவைகளுக்கான டிக்கெட்டுகளை 100% ஆன்லைனில் ஆர்டர் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு அமைய ஊழியர்களின் ஓய்வு காரணமாக புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

Related posts

பொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.

videodeepam

பாரம்பரியமான சுமைதாங்கி புனரமைப்பு!

videodeepam