deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை எதிர்ப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, 2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிரகாரம் காரணங்களை முன்வைத்து எழுத்துமூலம் இந்த முடிவை அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 9 ஆம் திகதியன்று, மின்சாரத் துறைக்கான பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களைத் திருத்துவதற்கும், ஜனவரி 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும் செலவை ஈடுசெய்யும் வகையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி,  பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த கட்டண திருத்தத்தை மீளாய்வு செய்யப்பட திட்டமிடப்பட்டது.

Related posts

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை துரிதப்படுத்தப்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 

videodeepam

நாடளாவிய ரீதியில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam

சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து

videodeepam