deepamnews
இலங்கை

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ – தேர்தலுக்குத் தாம் தயார் எனவும் தெரிவிப்பு

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்த வேண்டியது கடமையாகும்.

ஆனால், பணம் இல்லாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது.

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலுக்குத் நாம் தயார்.

இந்த அரசாங்கத்திற்கு வெற்றிபெறுவது தொடர்பில் உறுதிப்பாடு இல்லை.

எவ்வாறிருப்பினும், தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அப்போதுதான் கட்சியின் நிலையையும், மக்களின் எண்ணத்தையும் அறிந்துகொள்ள முடியும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டா பதவி நீக்கிய ஆளுநரை ரணில் நியமித்தது ஏன்? 

videodeepam

கிளிநொச்சியில் பல குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பாதிப்பு

videodeepam

மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

videodeepam