deepamnews
சர்வதேசம்

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

எகிப்தின் – செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பற்றியுள்ளதுடன் அதில் பயணித்த 3 பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகில் 12 பிரித்தானியர்கள் உட்பட 24 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக மார்சா அலம் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான படகு காலிப் துறைமுகத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்தது.

படகில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரித்தானியாவின் சுற்றுலாத் துறைக்கு இது பாரிய பின்னடைவாகும் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிப்பு!

videodeepam

பாரிய சர்ச்சைகளின் பின் பாகிஸ்தான் பிரதமர் தெரிவு!

videodeepam

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு.

videodeepam