deepamnews
இலங்கை

மின்கட்டணம் செலுத்தாத மஹிந்த ராஜபக்ச –  நாமல் வழங்கியுள்ள பதில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டிய இல்லத்தில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக பாதுகாப்பு விளக்குகள் பொறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மின்கட்டண தொகையை இன்னும் செலுத்தவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 – 15 ஆம் திகதி வரை நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெரும் தொகையிலான மின்கட்டணம் பதிவிடப்பட்டுள்ளதாகவும், அதனை இன்று வரை செலுத்தவில்லை எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இந்த விடயத்துடன் தொடர்புடைய மின்கட்டண பட்டியல் யாருக்கு அனுப்பப்பட்டது? எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டது? என்பது குறித்து உடனடியாக அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam

பௌத்தத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் மத நல்லிணக்கத்தை மதிக்கிறார்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

videodeepam