deepamnews
இலங்கை

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த சந்திப்பு எதிர்வரும் 11ஆம் திகதி காலை இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் இன்றுமுதல் மீண்டும் மழை நிலைமை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

videodeepam

பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  – சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

videodeepam

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நிறைவு – ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

videodeepam