deepamnews
இலங்கை

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  இடையே இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்வி அமைச்சர் பாடசாலைகளுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு

videodeepam

அரசியல் நோக்கங்களுக்காக ஆசிரியர்கள் தமது தொழிலைப் பலியிடக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு

videodeepam

உதவித் திட்டங்களின்போது மலையக மக்களின் பெயர்கள் வெட்டப்படவில்லை – அமைச்சர் ஜீவன்  தெரிவிப்பு

videodeepam