deepamnews
இலங்கை

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  இடையே இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வலஸ்முல்ல பகுதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் காயம்

videodeepam

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

videodeepam

தபால் வாக்குச்சீட்டுகளை 21 ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் கையளிக்க நடவடிக்கை

videodeepam