கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கெப்டாசிடிம் எனப்படும் தடுப்பூசியின் பாவனை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததை அடுத்து அதன் பாவனையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 67 வயதுடைய ஒருவர் கடந்த 6 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று முன்தினம் வரை அவருக்கு 10 தடவைகள் குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.