deepamnews
இலங்கை

நிலத்தடி நீரில் மாற்றம் காணப்படுமாயின் உடனடியாக பரிசோதிக்குமாறு அறிவுறுத்தல்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரின் சுவை, மணம் மற்றும் நிறத்தில் மாற்றம் காணப்படுமாயின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அலுவலகத்தில் பரிசோதிக்குமாறு குறித்த சபை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவடைந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர்  ஆர்.எம்.எஸ். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பு, புத்தளம், அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் பரிசோதனை நிலையங்களில் நீர் மாதிரிகளை பரிசோதிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸாரின் ஆதரவுடன் யாழ் மருதங்கேணியில் சட்டவிரோத மண் அகழ்வா ?? – சந்தேகம் கொள்ளும் பிரதேசவாதிகள் !

videodeepam

முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடி

videodeepam

சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

videodeepam