வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230828-WA0055.jpg)
அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து 09.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து துர்க்கையம்பாள் சமேதராக உள்வீதி ஊடாக வலம்வந்து, வெளிவீதியில் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230828-WA0058.jpg)
பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா 29.08.2023 அன்று நடைபெற்று, மாலைகொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும். இதில் பலபாகங்களில் இருந்து வருகைதந்து பக்தர்கள் கலந்துகொண்டன