deepamnews
இலங்கை

யாழ்ப்பாணத்தில் கசினோ நிலையம் செயற்படுகிறதா? – அறிமுகமானவர்களுக் மட்டும் அனுமதியாம்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கசினோ என அழைக்கப்படும் (சூது) விளையாட்டு இரவு நேரங்களில் பிரத்தியேக இடம் ஒன்றில் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் அறிய வருவதாவது,

யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதியில், தென் இலங்கையில் கசினோ விளையாட்டுக்களும் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட மையம் ஒன்றின் பதிவினை பல கோடி ரூபா கொடுத்து வாங்கி, யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றின் அருகாமையில் குறித்த மையம் இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரவு நேரங்களில் இயங்கும் குறித்த கசினோ நிலையம் ஏற்கனவே அறிமுகமான நபர்கள் ஊடாக பதிவு செய்யப்படும் நபர்களுக்கே அனுமதி வழங்கப்படுவதாகவும் இவ்வாறு அறிமுகமானவர்களுக்கு முதலில் திரைவழி குதிரைச் சவாரிப் போட்டியில் பங்குபெற்ற அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கசினோ விளையாட்டுக்கு சில ஆடம்பர விடுதிகளில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அனுமதிகள் வழங்கப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தில் செயல்படும் கசினோ நிலையம் யாழ்ப்பாண மாநகர சபையில் எவ்விதமான அனுமதிகளும் பெறவில்லை எனத் தெரிய வருகிறது.

Related posts

ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர்

videodeepam

மத்திய வங்கியில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

videodeepam

இலங்கையில் கடுமையான பாதுகாப்புச் சட்டங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. வலியுறுத்தல்

videodeepam