deepamnews
இலங்கை

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை.

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆசிரியர்களும் கிழக்கு மாகாணத்தில் சுமார் 187 ஆசிரியர்களும் நீண்டகாலமாக நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

குறித்த தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தமக்கான நிரந்தர நியமத்தை பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அதுதொடர்பாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபித்ததுடன் நிரந்தர நியமனங்கள் வழக்கப்பட வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்திய நிலையில், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு.

videodeepam

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு தாமதமடைந்த நிலையில், தற்போது ஆரம்பமாகியுள்ளது.

videodeepam

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சோதனை சாவடிகள் – இராணுவ கட்டளை தளபதி அறிவிப்பு

videodeepam