வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் இன்று நள்ளிரவு (07.09.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/09/20230906_090320-768x1024.jpg)
கிருஷ்ண பகவானுக்கு நடைபெற்ற விஷேட அபிஷேக ஆராதனையை தொடர்ந்து தீபபூஜையும் இடம்பெற்றன. இவ் உற்சவ கிரியைகள் ஆலய பிரதம குரு இ.ரமணிதரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/09/FB_IMG_1693705939291.jpg)
கிருஷ்ண பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கிருஷ்ணன் ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பக்த அடியார்கள் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.