deepamnews
சினிமா

விஜய் மகன் ஆசை மறுக்கப்பட்டது ஏன்?

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்தது.

ஆனால் இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார், மற்ற நடிகர் நடிகைகளின் விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. இந்நிலையில், இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தன்னுடைய முதல் படம் என்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீனை இசையமைக்க வைக்கலாம் என முடிவு செய்துள்ளார் சஞ்சய். ஆனால், இதற்கு லைக்கா நிறுவனம்மறுப்பு கூறிவிட்டதாம்.

அவருக்கு பதிலாக அனிருத் இப்படத்திற்கு இசையமைத்தால், படத்திற்கு நல்ல பிரபலம் கிடைக்கும், படத்தின் பிஸினஸ்க்கும் உதவும் என எண்ணி சஞ்சய்யின் முதல் படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைக்க லைக்கா முடிவு செய்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் நரேந்திர மோடி பாடினால் எப்படி இருக்கும் ?கற்பனை செய்த ரசிகர்!!!

videodeepam

ஜெயிலர் படத்தை விட அதிக வசூல் செய்து நம்பர் 1 இடத்தை பிடித்தது லியோ !!!

videodeepam

தமிழ்நாட்டில் ஒரு மாதமாக அஜித் படமா, விஜய் படமா என்பது குறித்தே விவாதம் – அன்புமணி ஆதங்கம்

videodeepam